Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 0 comments ]

தமிழ் முதல் மொழிப் பாடம்: மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை


திறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தைக் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி மாநில அளவில் தமிழை முதல் மொழிப்பாடமாகப் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அரசு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகை:

1. முதலிடம் ரூ.15,000
2. இரண்டாமிடம் ரூ.12,000
3. மூன்றாமிடம் ரூ.10,000

அதே போன்று, மாநில அளவில் தமிழை முதல் மொழிப் பாடமாக படித்து முதன் மூன்று இடங்களைப் பெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை:

1. முதலிடம் ரூ.7500
2. இரண்டாமிடம் ரூ.6000
3. மூன்றாமிடம் ரூ.5000

மேலும் மேல்நிலைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளி மாணவர்களின் மேற்கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கிறது.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மேற்கல்விக்காக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, மேல்நிலைத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் மேற்கல்விக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கிறது. பாடவரியாக மாநிலத்தில் முதலிடம் பெறும் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.


0 comments

Post a Comment